அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - FAQ

1964 ஆம் ஆண்டு, ஊழல் தடுப்பு குறித்த சந்தானம் கமிட்டியின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசால் சுதந்திரமாக செயல்படக்கூடிய வகையில் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய மாதிரியைப் போன்ற கண்காணிப்பு ஆணையங்கள் பெரும்பாலான மாநிலங்களில் அமைக்கப்பட்டன. அதன்படி, 26.03.1964 அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.
புலனாய்வு / விசாரணைகள் தொடர்பான நேர்வுகளில், சென்னையிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், கண்காணிப்பு ஆணையத்தின் (Vigilance Commission) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. நிருவாக செயல்பாடுகளைப் பொறுத்தவரை, இது தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
1. பொறி வைத்து பிடித்தல்.
2. அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்துதல்.
3. அரசு ஊழியர்கள் மீதான ஊழல் நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு அறிக்கைகளைத் தொடங்கி வைத்தல்.
4. ரூபாய் 50 லட்சத்துக்கும் மிகையான தொகை திட்ட மதிப்பீடாக கொண்ட அரசின் பெரிய திட்டங்களை உன்னிப்பாக கண்காணித்தல்.
5. மேற்கொள்ளும் விசாரணைகள்
(i) முதனிலை விசாரணை. (ii) விரிவான விசாரணை. (iii) பதிவுறு வழக்கு - முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல் மற்றும் விசாரணை மேற்கொள்ளுதல்.
"தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை கையேடு" மற்றும் 2018ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டிற்கான ஊழல் தடுப்பு சட்டத்தின்படி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் செயல்படுகிறது.
ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை மேற்கொள்ளும் வழக்குகள் / விசாரணைகளை கீழ்கண்டவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது?
(i) நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி
(ii) தமிழ்நாடு அரசு / சென்னையிலுள்ள கண்காணிப்பு ஆணையரின் ஆணையின்படி
(iii) புகார் மனுவின் மீது
(iv) விழிப்பு ஆதார அறிக்கைகளின்மீது மற்றும்
(v) திடீர் சோதனைகளின்படி.
1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு.2(c) இன் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியர்கள் மற்றும் மாநில அரசால் நிறுவப்பட்ட பொது நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சிகளின் பணியாளர்கள் உட்பட மாநில அரசின் விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்து துறை அரசு ஊழியர்களும், மாநகராட்சி மன்ற தலைவர்கள், மாநிலத்திற்குள் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் போன்றவர்கள். அரசு ஊழியர்கள் செய்யும் ஊழல் குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும் தனி நபர்களையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் நடவடிக்கையின் வரம்பிற்குள் கொண்டு வரலாம்.
பொறி வைத்தல் என்பது ஓர் அரசு ஊழியர்/பொது ஊழியர் புகார்தாரரிடம் இருந்து லஞ்சம் வாங்கும் போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தால் கையுங்கறவுமாகப் பிடிக்கப்படும் ஒரு செயல்முறையாகும். பொறி வைத்துப்பிடிக்கப் பயன்படுத்தப்படும் பணத்தை புகார்தாரர் வழங்க வேண்டும். லஞ்சம் கேட்கும் மற்றும் வாங்கும் ஊழல் செய்யும் அரசு பொது ஊழியர்களை பிடிக்கும் வழக்குகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. லஞ்சம் கேட்கும்போது, ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடிப்பது பொறி வைத்து பிடித்தல் என்று அழைக்கப்படுகிறது. இது சட்டப்படியான வார்த்தை அல்ல. பொறி வைத்து பிடிக்கும் செயல்பாட்டின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், அரசு ஊழியருக்கு தண்டனையைப் பெற்றுத்தரும்பொருட்டு குற்றப்பத்திரிகையுடன் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றன.
பணத்தை புகார்தாரரே வழங்க வேண்டும், வேறு யாரும் அல்ல.
அத்தகைய பணம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஒரு முக்கியமான ஆதாரமாகும், இது நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்தப்படும். இது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தால் கைப்பற்றப்பட்டு குற்றப்பத்திரிகையுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. விசாரணையின் முடிவில், புகார்தாரருக்கு பணத்தை திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிடும். எனவே, விசாரணை முடிந்த பின்னர், இந்த பணம் புகார்தாரருக்குத் திருப்பித் தரப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத்தில் பணத்தை வைப்பீடு செய்வதால் புகார்தாரர் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, விசாரணை நீதிமன்றத்திற்கு அவர் வரும்போது, புகார்தாரருக்கு பொறிவைந்து பிடிப்பதற்கு பயன்படுத்ப்படும் பணத்திற்கு சமமான பணத்தைத் திருப்பி செலுத்துவதற்கான நடைமுறையை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் வகுத்துள்ளது. இத்தகைய வழக்குகளில், புகார்தாரரிடமிருந்து ஒரு ஒப்பந்தத்தைப்பெறும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இரசாயனம் தடவப்பட்ட கறைபடிந்த லஞ்சப் பணம், வழக்கு முடிவிற்கு பின்னர், பொது கருவூலத்தில் வைப்பீடு செய்யப்படுகிறது.
ஆம்: பெயரில்லாத புனைப்பெயர் உடைய புகாரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் ஏற்காது. புகார் அளித்த பின்னர், தகவல் அளிப்பவர் / புகார் அளிப்பவர், தன்னுடைய அடையாளத்தை இரகசியமாக வைத்திருக்குமாறு கோரலாம். அத்தகைய நபர்களின் அடையாளம் இரகசியமாக வைக்கப்படுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் மேற்கொள்கிறது.
சென்னையிலுள்ள கண்காணிப்பு ஆணையத்தின் மேற்பார்வையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் செயல்படுகிறது. 2018ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988 மற்றும் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், சென்னையிலுள்ள கண்காணிப்பு ஆணையம்/ தமிழ்நாடு அரசின் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதல் / அனுமதி மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்பேரில் மட்டுமே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் வழக்குகளை விசாரிக்க முடியும்.
2018 இல் திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம், 1988ன்படி, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், மாநில அரசுக்குச் சொந்தமான அல்லது கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கிறது. இது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களையும் விசாரிக்கிறது.
ஆம்: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் பணியாளர்களின் நடத்தையை கண்காணிக்கும் வகையில் ஒரு வலுவான உள் கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், அதன் பணியாளர்களின் நேர்மை ஒருமைப்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பூஜ்ஜிய சகிப்புத்தன்மையுடன் இயங்குகிறது. இயக்குனரகம் தன்னுடைய சொந்த பணியாளர்களின்மீது ஊழல் புகார்கள் இருப்பின் அதன் உண்மை தன்மையைப்பொறுத்து அவர்கள் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்வதில் தயங்குவதில்லை என்பதிலிருந்து இதை அறியலாம்.
யாதொரு பொது ஊழியரும் தன்னுடைய வருமானங்களுக்கு அதிகமாக சொத்துக்களைச் சேர்த்தால், அந்த வழக்கு வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்தல் வழக்கு எனப்படும்.
நிச்சயமாக. ஓர் அரசு ஊழியரின் வருமான ஆதாரத்திற்கு அப்பாற்பட்ட சொத்துக்கள் குவித்தல் மற்றும் செலவினங்களை செய்திருப்பது, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பிரிவு 13 இன் கீழ் தண்டனைக்குரியது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், அத்தகைய பொது ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் செலவுகள் குறித்த குறிப்பிட்ட விவரங்களை வழங்குமாறு குடிமக்களை கேட்டுக்கொள்கிறது.
யாதொரு அரசு ஊழியரும் தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி அரசின் கருவூலத்திற்கு இழப்பை ஏற்படுத்தினால், இந்த அரசு ஊழியரின் இச்செயல் குற்றவியல் முறைகேடாகும். அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நிச்சயமாக. ஊழல் தடுப்புச் சட்டம், 1988-இன் 8 & 9 பிரிவுகளின்படி அத்தகைய தரகர்கள்/இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்தகைய தரகர்கள்/இடைத்தரகர்களுக்கு எதிரான தகவல்/புகார்களைப் பெறும்போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், புகார்தாரரின் உதவியுடன் அல்லது வேறுவிதமாக அவர்களைப் பொறி வைத்து பிடிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட பொது ஊழியருக்கு எதிராக ஆதாரங்களை சேகரிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் முயற்சிக்கிறது. ஊழல் தடுப்புச் சட்டம், 1988ன் பிரிவு 10ன் கீழ் இத்தகைய அரசு ஊழியர் தண்டிக்கப்படுவார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மாநில அரசின் பல பொது அலுவலகங்களில் செயல்படும் தரகர்கள்/ இடைத்தரகர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், அத்தகைய தகவல்களைக் கூர்ந்தாய்வு செய்து புகார் மனு இல்லாமலேயே, அத்தகைய தரகர்கள்/ இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கிறது.
பொது மக்கள் மாவட்டங்களில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அலுவலகங்களை நேரடியாகவோ, அல்லது மின்னஞ்சல் மனுக்களின் வாயிலாகவோ அணுகலாம்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினால் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் குற்றத்தின் பெரும்பகுதி மற்றும் கடுமையான குற்றங்கள் தனிநபர்கள் வழங்கிய நம்பிக்கையான வாய்வழி தகவலை அடிப்படையாக கொண்டவை. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அத்தகைய தகவல்களை மற்றும் தகவல் அளிப்பவர்களைக் கையாள்வதில் மிகவும் சிறப்பாக வகுக்கப்பட்ட கொள்கையை கொண்டுள்ளது அது கவனமாக பின்பற்றப்படுகிறது. தகவல் அளிப்பவர்கள் தகவல் அளிக்கப்பட்ட அதிகாரியால் மட்டுமே கையாளப்படுவார்கள். தகவல் அளிக்கப்பட்ட அதிகாரியின் மூத்த அதிகாரிகளால் கூட தகவல் அளிப்பவரின் அடையாளத்தை வெளியிடக் கோர முடியாது. அத்தகைய தகவல் அளிப்பவர்களின் அடையாளம் யாதொரு பதிவிலும் எழுத்துப்பூர்வமாக இருக்காது. இது நீதிமன்றத்திற்கு கூட தெரிவிக்கப்படாது. தகவல் அளிப்பவரின் அடையாளத்தை வெளியிடுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினை கட்டாயப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. அத்தகைய தகவலின் இரகசியத்தன்மை கசிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் அதே வேளையில், அத்தகைய தகவல்கள் விரிவான ஆய்விற்குட்படுத்தாமல், அத்தகைய தகவலின் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குற்றச்செயல் குறித்த முதன்மையான ஆதாரங்களை உறுதி செய்த பின்னர் மட்டுமே குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின்படி லஞ்சம் கொடுப்பதும் குற்றமாகும், ஆனால் அது தானாக முன்வந்து கொடுக்கப்படும்போது மட்டுமே. இருப்பினும், ஒரு அரசு ஊழியர் லஞ்சம் கேட்டவுடன், அவர்கள் கேட்கும் தொகையை புகாராக கொடுக்க முன்வந்தாலும் கூட சட்ட அமலாக்க முகமைகள் புகார் செய்யும் நபர்களை சட்டம் பாதுகாக்கிறது.1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின்படி, பொறி வைக்கும் செயல்பாட்டின் போது புகார்தாரருக்கு அத்தகைய பாதுகாப்பிற்கு வழிவகைச்செய்கிறது. எனவே, இதுபோன்ற விவகாரங்களில் புகாதாரர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
கேள்வி எண்.20க்கான பதிலில் குறிப்பிட்டுள்ளபடி, தானாக முன்வந்து லஞ்சம் கொடுப்பதும் 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில் நேர்மையான அரசு ஊழியருக்கு ஒருவர் இலஞ்சம் கொடுக்க முற்படும்போது அது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். நேர்மையான அரசு ஊழியரின் புகாரின் அடிப்படையில் லஞ்சம் கொடுப்பவரை பொறி வைத்துக் கையும் களவுமாகப் பிடிக்கலாம். எனவே, நேர்மையான அரசு ஊழியர், அத்தகைய நபர்களை புறக்கணித்து கண்டிப்பதை விட, அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது லஞ்சம் கொடுப்பதை தடுக்கும்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையானது முற்றிலும் தன்னைச்சையாக மற்றும் நேர்த்தியான முறையில் விசாரணைகளை நடத்துகிறது. விசாரணையின் போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கு தடயவியல் ஆய்வகங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். எனவே இதற்கு காலக்கிடு அதிகமாக தேவைப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு விசாரணையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் பல நிலைகளில் மேற்பார்வை செய்யப்படுகிறது. சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் நிருவாக அதிகாரிகள் மற்றும் சட்ட அதிகாரிகளால் பல நிலைகளில் கூர்ந்தாய்வு செய்யப்படுகின்றன. இந்த அனைத்து காரணிகளின் காரணமாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையானது விசாரணைகளை இறுதிசெய்ய அதிக காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இதன் பின்னர், கைய்யூட்டு பெற்ற வழக்குகளின் விசாரணை பொதுவாக ஆறு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்துவது முக்கியம். விசாரணைகளை விரைவாக முடிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வழகுகளின் விசாரணையை ஆரம்பித்த ஆறு மாத காலத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் (அல்லது) மின்னஞ்சல் (அல்லது) நேரடியாக தகவல் / புகாரை அனுப்புவதன் வாயிலாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் பிரிவு அலுவலகங்களை அணுகலாம்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையானது 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்வரும் குற்றங்களை விசாரிக்கிறது.
ஆம், இதுபோன்ற வழக்குகள் உள்ளன. லஞ்சம் கொடுக்கப்படுவதற்கு முன், லஞ்சம் கொடுக்க தயாராக உள்ளவர் மற்றும் லஞ்சம் வாங்குபவர் பற்றிய தகவல்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையானது உறுதியான ஆதாரமுள்ள தகவலைப் பெற்றால், அந்தத் தகவலை சரிபார்த்து, லஞ்சம் கொடுப்பவர் மற்றும் இலஞ்சம் வாங்குபவர் இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு பொறிவைப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.
அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார் குறித்து, குறிப்பிட்ட ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமான புகாருடன் பொது மக்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையை அணுகினால், அத்தகைய புகார் மீது தேவையான நடவடிக்கை எடுக்கும்.
இல்லை. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் அத்தகைய கொள்கை எதுவும் இல்லை. மேலே உள்ள கேள்வி எண்.19 க்கான பதிலில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு குற்றத்தைப் பற்றிய தகவலை வழங்கும் நபருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படாது. இருப்பினும், ஒரு குற்ற வழக்கில் தேடப்படும் குற்றம் சாட்டப்பட்ட நபரைப் பற்றிய தகவலை கொடுக்கும் நபருக்கு ரொக்க வெகுமதி கொடுப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அறிவித்து, அவ்வாறான தகவலை ஒரு நபர் அளித்து, அத்தகைய தகவலின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிடிபட்டிருந்தால், தகவல் அளிப்பவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
நிச்சயமாக இல்லை. அத்தகைய சூழ்நிலையிலும் நடவடிக்கை எடுக்க முடியும். 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் படி, லஞ்சம் கோருவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது, அரசு ஊழியர் மீது வழக்குத் தொடர லஞ்சம் வாங்குவது கட்டாயத் தேவையல்ல. அரசு ஊழியர் அவரது அலுவல் பூர்வ பணியை செய்வதற்காக லஞ்சம் கேட்டதை ஆதாரங்கள் மூலம் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடிந்தால், அரசு ஊழியரை குற்றவாளியாக அறிவிக்க முடியும். பொறி வைப்பது குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்களை சேகரிப்பதற்கான ஒரு வழியாகும். மேலும் இது உறுதியான / நிருபிக்கதக்க ஆதாரங்களை சேகரிக்க உதவுகிறது மற்றும் ஒரு வழக்கை முழுமையாக வெற்றியடையச் செய்ய வழிவகிக்கிறது. பொறி வைக்க இயலாத நிலையில், லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்களை சேகரிப்பது கடினம். இருப்பினும், பொறி வைப்பது கட்டாயமானது என்றும், பொறி வைக்க இயலாத நிலையில் எதுவும் செய்ய முடியாது என்றும் அர்த்தமல்ல.
யாதொரு அரசு அலுவலகத்திலும் முறைகேடுகள் அல்லது ஊழல் நடவடிக்கைகள் பற்றிய நம்பகமான தகவல்கள் கிடைத்தால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையானது அதிரடி சோதனையை நடத்துகிறது.
மூத்த அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் காவல்துறையில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அமைச்சுப் பணியாளர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் / வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை / காவல் துறையிலிருந்து அல்லது கருணை அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள். குற்ற வழங்கு தொடர்வுத்துறையிலிருந்து சட்ட அதிகாரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
இந்திய காவல் பணி அல்லாத அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் கமுக்க பிரிவின் பணியாளர்கள் அடிப்படை ஊதியத்தில் 7.5% சிறப்பு ஊதியமாகப் பெறுகிறார்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் இந்திய காவல் பணி அதிகாரிகள் அவர்களது அடிப்படை ஊதியத்தில் (தனிநபர்கள்) சிறப்பு ஊக்கத்தொகை படியாக 7.5% பெறுகிறார்கள்.