இயக்குனர்

திரு. அபை குமாா் சிங், இ.கா.ப.,

காவல்துறை இயக்குனர்

செய்தி

நிகழ்கால சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஊழலும் ஒன்றாகும். இது நல்லாட்சியை வலிமையற்றதாக்குவதுடன் பொதுக் கொள்கையைச் சிதைத்து, நாட்டின் வளங்கள் விரயமாக வழிவகுப்பதுடன் வளர்ச்சியையும் தடுக்கிறது. அனைத்திற்கும் மேலாக, கையூட்டை அளிக்க இயலாத நிலையில் உள்ளவர்களுக்கே, ஊழல் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், பொதுவாக பொதுமக்களின், அதிலும் குறிப்பாக, அறிவார்ந்த குடிமக்களின் ஒத்துழைப்புடன் ஊழலை பெறுமளவில் கட்டுப்படுத்த இயலும். ஊழலின் பல்வேறு பரிமாணங்கள், ஊழலைச் சமாளிக்க, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சட்ட விதிகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பதற்கும் ஒரு முயற்சியே இந்த வலைத்தளமாகும்.

Slide1 Slide1 Slide2 Slide3 Slide4 Slide5 Slide5 Slide5

திருக்குறள் - அறத்துப்பால் : குறள் 171

"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"

விளக்கம் :

நடுவு நிலைமையின்றி பிறரது நல்ல பொருளைக் கவர ஆசை கொண்டால் அந்த ஆசை அவனது குடியைக் கெடுக்கும், அப்பொழுதே குற்றமும் வந்து சேரும்.

1. 07-02-2025 – கடலூர் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அரசு நிதியை முறைகேடு செய்த வழக்கில் கடலூர் மாவட்ட அப்போதைய சித்திரைச்சாவடி கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் மொத்தம் ரூ.10,000/- அபராதமும் விதித்தது.

2. 06-02-2025 – திருப்பூர் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் லஞ்ச (கையூட்டு) வழக்கில் திருப்பூர் மாவட்ட அப்போதைய விருமாண்டம்பாளையம் கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் மொத்தம் ரூ.2,000/- அபராதமும் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சோ்ந்த தனிநபருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் மொத்தம் ரூ.2,000/- அபராதமும் விதித்தது.

3. 05-02-2025 – திருப்பூர் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் லஞ்ச (கையூட்டு) வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மாண கழக அப்போதைய திருப்பூர் மாவட்ட உடுமலைபேட்டை நகர உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் மொத்தம் ரூ.4,000/- அபராதமும் விதித்தது.

4. 03-02-2025 - சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் லஞ்ச (கையூட்டு) வழக்கில் சென்னை பெருநகர காவல்துறையைச் சோ்ந்த அப்போதைய சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும். மொத்தம் ரூ.1,00,000/- அபராதமும் விதித்தது.

5. 30-01-2025 – வேலூர் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் லஞ்ச (கையூட்டு) வழக்கில் அப்போதைய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் இளநிளை உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையும் மொத்தம் ரூ.15,000/- அபராதமும் விதித்தது.

தண்டனை பெற்ற வழக்குகள்

convicted

முக்கியமான பொறிகள்

imp.trap

விஜிலென்ஸ் விழிப்புணர்வு

vigprog

பத்திரிக்கை செய்தி

press